Tuesday, February 3, 2009

கவினன்

"நீங்கள் கவிஞனாம்...!
விசிறிகள் கூட உண்டாம்....!
ஊருக்குள்ள கதைக்கினம்.. ....!
எல்லாருக்கும் எழுதுறீங்க
எனக்காக ஒன்று..."
கேட்டாள் உன் அம்மா.

எழுதினேன் "கவினன்"
உன் பெயரை
இறுக்கி அணைத்து
ஓர் முத்தம் தந்தாள்
இதுவொன்றே போதுமென்று..!

(நான் எழுதிய கவிதைக்கு இன்று வயது ஒன்று.)

No comments: