Sunday, December 27, 2009
Thursday, March 19, 2009
Saturday, February 14, 2009
உக்காமல் இருக்கிறது உன் ஞாபகங்கள்
+Kajan.jpg)
காலம் பல கடந்து கரைந்துவிட்டன
கரையினில் ஒதுங்கிய சருகுகளாய் -இன்னமும்
உக்காமல் இருக்கிறது உன் ஞாபகங்கள்
நாங்கள் சந்தித்த 102 கொட்டாஞ்சேனை பேருந்தும்
நடந்து திரிந்த வெள்ளவத்தை "பீச்" மணலும்
வயதாகி வழிமாறி உருக்குலைந்த உடலானாலும்
பார்கும்போது நம் ஞாபகங்களை மீட்டுகிறதாம்
இப்போதும் கொழும்பில் இருக்கும் நண்பன் சொல்கிறான்
ஐரோப்பாவின் இதயத்தில் நீ இருக்கிறாய்
ரொரன்டோவில் இருந்து என்குரல்
கடல்தாண்டி உன் செவிகளில் விழும்
என்பதில் நம்பிக்கையில்லை -இருந்தாலும்
மடியில் இருக்கும் உன் இரண்டாம் குழந்தையையும்,
நடைபழகி தரையில் தடக்கி விழுந்து அழும்
உன் முதல் குழந்தையும் முத்தமிட்டபடி ஓரு கணம்
நினைப்பாயா..? இன்றைய நாளை...!
இன்றைய நாள் எங்களுக்கானதல்ல
எங்களுக்கானவர்களுக்கானது..!!!
எங்கள் தோல்வி அவர்களுக்கு வெற்றி
"இங்கே! விடிய எழும்பி இவ்வளவு நேரம்
என்ன செய்கிறீங்க.., ..இவனை ஒருக்கா பிடியுங்க"
இப்போது, என் மடியிலும் மகன்
எழுதும் பேனாவை பறிக்கிறான்...
எழுதுவதற்கா..? எறிவதற்கா..?
"ம்" எழுவதற்காகத்தான்.. இனியென்ன
நான் முடிக்கிறேன் அவனே தொடர்வான்..!
Tuesday, February 3, 2009
கவினன்
"நீங்கள் கவிஞனாம்...!
விசிறிகள் கூட உண்டாம்....!
ஊருக்குள்ள கதைக்கினம்.. ....!
எல்லாருக்கும் எழுதுறீங்க
எனக்காக ஒன்று..."
கேட்டாள் உன் அம்மா.
எழுதினேன் "கவினன்"
உன் பெயரை
இறுக்கி அணைத்து
ஓர் முத்தம் தந்தாள்
இதுவொன்றே போதுமென்று..!
(நான் எழுதிய கவிதைக்கு இன்று வயது ஒன்று.)
விசிறிகள் கூட உண்டாம்....!
ஊருக்குள்ள கதைக்கினம்.. ....!
எல்லாருக்கும் எழுதுறீங்க
எனக்காக ஒன்று..."
கேட்டாள் உன் அம்மா.
எழுதினேன் "கவினன்"
உன் பெயரை
இறுக்கி அணைத்து
ஓர் முத்தம் தந்தாள்
இதுவொன்றே போதுமென்று..!
(நான் எழுதிய கவிதைக்கு இன்று வயது ஒன்று.)
Friday, January 9, 2009
என் மண்மீது யார் கண்பட்டது..?
நான் மண் அளைந்து மகிழ்ந்து விளையாடிய
வன்னி மண்ணில் யார் கண்பட்டது..?
நான் ஊஞ்சலாடி உழுது விதைத்து உண்ட
மண்ணில் ஏன் இரத்த கறைபட்டது..?
நான் காதல்கொண்டு நெற்கதிரோடு கதைபேசி
நடந்த வரம்புகள் ஏன் உடைபட்டது..?
வன்னி மண்ணில் யார் கண்பட்டது..?
நான் ஊஞ்சலாடி உழுது விதைத்து உண்ட
மண்ணில் ஏன் இரத்த கறைபட்டது..?
நான் காதல்கொண்டு நெற்கதிரோடு கதைபேசி
நடந்த வரம்புகள் ஏன் உடைபட்டது..?
Thursday, December 25, 2008
வய(து)தில் மாற்றம்
5 வயதில் தமிழ் படித்தேன் என் தாயிடம்
15 வயதில் தமிழ் கவி வடித்தேன் உன்னிடம்
25 வயதில் தத்துவம் பேச வைத்துவிட்டாய் பிறரிடம்
15 வயதில் தமிழ் கவி வடித்தேன் உன்னிடம்
25 வயதில் தத்துவம் பேச வைத்துவிட்டாய் பிறரிடம்
பாலைவனப் பறவை
உலகில் பாலைவனம்
எப்படி வந்தது?
அதுவும் காதலித்து
தேகச் செழிப்பு இழந்ததா?
என்னைப்போல..!!
உன் கருங்குழல் கலைத்து
வீசும் தென்றல் குளிர்ந்து
பொழிகிறது - இந்த
பாலைவனப் பறவைக்குள்
மழையாய்..!!
எப்படி வந்தது?
அதுவும் காதலித்து
தேகச் செழிப்பு இழந்ததா?
என்னைப்போல..!!
உன் கருங்குழல் கலைத்து
வீசும் தென்றல் குளிர்ந்து
பொழிகிறது - இந்த
பாலைவனப் பறவைக்குள்
மழையாய்..!!
Subscribe to:
Posts (Atom)