Monday, August 18, 2008

I am in Quebec City

I am in Quebec City

Today Morning

Today Morning i spent my time in Eaton Centre, Montreal

Sunday, August 17, 2008

I went Val-Morin

I went Val-Morin Hindu Temple today.

I was in Montreal

Montreal is the largest city in Quebec and the second largest in Canada, with a metropolitan population of more than 3,360,000. Montreal is among the oldest cities on the continent, its history a rich backdrop to its vibrant multicultural life.
Montreal’s climate varies a lot over the year. The city is known for its cold winters, but its summers are hot and generally sunny. May to October are arguably the most pleasant months for outdoor activities and walking.

I am in Montreal

I am in Montreal

Saturday, August 16, 2008

I am in Ottawa



I am in Ottawa today. I leave tonight to Montreal.

Wednesday, August 13, 2008

ஆகஸ்டு 13

ஆகஸ்டு 13 கிரிகோரியன் ஆண்டின் 225வது நாளாகும். நெட்டாண்டுகளில் 226வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 140 நாட்கள் உள்ளன

1920 - போலந்து - சோவியத் ஒன்றியம் போர் ஆரம்பமாயிற்று. ஆகஸ்ட் 25 இல் முடிவடைந்த இப்போரில் செம்படையினர் தோற்றனர்.

1937 - ஷங்காய் சமர் ஆரம்பமானது.

1954 - பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.

1960 - மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1961 - ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு பேர்லினின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை மூடி கிழக்கு ஜேர்மனியினர் தப்பிச் செல்லாவண்ணம் பேர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.

2004 - கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.

2004 - புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 - 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.

2006 - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2006 - அல்லைப்பிட்டியில் இலங்கை கடற்படையினர் மற்றும் துணை இராணுவக் குழுவினர் தமிழர் வீடுகளுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 மாதக் குழந்தை உட்பட 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

Tuesday, August 12, 2008

ஆகஸ்டு 12

கிமு 30 - மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள்.

1281 - மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கானின் கடற்படைகள் ஜப்பானை அணுகும் போது சூறாவளியில் சிக்குண்டு இறந்தனர்.

1480 - ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்ளாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.

1499 - வெனிசியர்களுக்கும் ஒட்டோமான் துருக்கியர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.

1851 - ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1853 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.

1877 - அசாப் ஹோல் என்பவர் செவ்வாய்க் கோளின் டெய்மோஸ் என்ற சந்திரனைக் கண்டுபிடித்தார்.

1883 - கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.

1914 - முதலாம் உலகப் போர்: பிரித்தானியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. பிரித்தானிய இராச்சியதின் அனைத்து குடியேற்ற நாடுகளும் இதனுள் அடங்கின.

1952 - மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள்இ கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.

1953 - சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.

1960 - எக்கோ ஐ என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.

1964 - இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.

1978 - ஜப்பானும் மக்கள் சீனக் குடியரசும் தமக்கிடையே நட்புறவுஇ அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

1981 - ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.

1985 - ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதிக் கொண்டதில் 520 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காப்பாற்றப்பட்டனர்.

1985 - ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

1990 - வீரமுனைப் படுகொலைகள்இ 1990: அம்பாறைஇ வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990 - அமெரிக்காஇ தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

2000 - கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.

2005 - ஸ்ரீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில்இ நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.

2005 - மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.

2005 - இலங்கையின் தமிழ் வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.

ஆகஸ்டு 11

1812 - இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.

1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.

1965 - கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

1968 - பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.

1972 - வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர்.1984 - வானொலி ஒன்றிற்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களேஇ ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்".

1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.

2003 - ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.

2006 - யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.

Sunday, August 10, 2008

ஆகஸ்டு 10

1904 - ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.

1913 - பால்கான் போர்கள்: பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் ந்கரில் அமைதி உடன்பாட்டை எட்டின.

1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1948 - ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார்.

1990 - மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.

2000 - உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது (www.ibiblio.org தரவின் படி)

2003 - யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமனம் புரிந்த முதலாவது மனிதர்.

2006 - திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

Friday, August 8, 2008

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைப்பெறும்.

கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைப்பெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும்.

உத்தியோகபட்ச அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது நகரில் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். mascotகளாக ஒலிம்பிக்கின் ஐந்து நிறங்களிலான ஐந்து "புவாக்கள்" தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இம்முறை போடிகளில் குறிக்கோளாக "ஒரே க‌ன‌வு ஒரே உல‌க‌ம்" தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, August 5, 2008

ஆகஸ்ட் 5

1100 - இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி முடி சூடினான்.

1305 - இங்கிலாந்துக்கு எதிராகக் கிளர்ச்சிக்குத்தலைமை வகித்த வில்லியம் வொலஸ் கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

1583 - சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜோன்ஸ்இ நியூபவுண்லாந்தில் அமைத்தார்.

1689 - 1500 இரக்கேசுக்கள் கியூபெக்கின் லாச்சின் நகரைத் தாக்கினர்.

1806 - இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.

1870 - புருசியர்களுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் புருசியா வெற்றி பெற்றது.

1884 - விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.

1914 - ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தைல் கைச்சாத்திட்டன.

1940 - இரண்டாம் உலகப் போர்: லாத்வியா சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

1943 - இரண்டாம் உலகப் போர்: ட்ரொய்னா என்ற இடத்தில் போர் இடம்பெற்ற போது காலை 11:00 மணிக்கு எட்னா மலை வெடித்தது. இதன் புகை மண்டலம் பல மைல் உயாரத்துக்குக் கிளம்பியது.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியாஇ நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 545 ஜப்பானிய போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் செல்ல எத்தனித்தனர்.

1944 - போலந்து தீவிரவாதிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்த ஜேர்மனிய தொழிற் பண்ணையொன்றில் இருந்து 348 யூதர்களை விடுவித்தனர்.

1949 - எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6000 பேர் கொல்லப்பட்டனர். 50 நகரங்கள் அழிந்தன.

1960 - புர்கினா பாசோ (அப்பர் வோல்ட்டா) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962 - 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.

1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்ஜெலீசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1963 - ஐக்கிய அமெரிக்காஇ சோவியத் ஒன்றியம்இ ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம் விண்வெளி மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.

1969 - மரைனர் 7 செவ்வார்க் கோளிக்கு மிகக் கிட்டவாக (3இ524 கிமீ) சென்றது.

1979 - ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.

1989 - நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.

2003 - இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

_________________________________________________________________

பிறப்புக்கள்

1850 - மாப்பசான்இ பிரெஞ்சு எழுத்தாளர் ( 1893)
1908 - ஹரல்ட் ஹோல்ட்இ ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமர் (1967)
1923 - தேவன் நாயர்இ சிங்கப்பூர் அதிபர்
1930 - நீல் ஆம்ஸ்ட்றோங் சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர்
1968 - நளாயினி தாமரைச்செல்வன் ஈழத்து எழுத்தாளர்
1975 - கஜோல் இந்தித் திரைப்பட நடிகை
1987 - ஜெனிலியா இந்தியத் திரைப்பட நடிகை

Monday, August 4, 2008

ஆகஸ்ட் 4

1860 - இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார்.

1902 - தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.

1906 - சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மன் பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஐக்கிய இராச்சியம் ஜெர்மனியின் மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது.

1916 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியுடன் லைபீரியா போர் தொடுத்தது.

1936 - கிரேக்கத் தளபதி இயோனிஸ் மெட்டாக்சஸ் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவனாக அறிவித்தான்.

1946 - வடக்கு டொமினிக்கன் குடியரசில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டு 2000 பேர் வீடுகளை இழந்தனர்.

1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்களான மைக்கல் ஷ்வேர்னர் ஆண்ட்ரூ குட்மன் ஜேம்ஸ் சானி ஆகியோர் மிசிசிப்பியில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். இவர்கள் ஜூன் 21 இல் காணாமல் போயிருந்தனர்.

1975 - மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஜப்பானிய செம்படையினர் AIA கட்டிடத்தைத் தாக்கி அமெரிக்கத் தூதுவர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர்.

1984 - அப்பர் வோல்ட்டா ஆபிரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1987 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.

1991 - "ஓசியானோஸ்" என்ற கிரேக்க கப்பல் தென்னாபிரிக்காவில் மூழ்கியது. அனைத்து 571 பயணிகளும் காப்பாற்றப்பட்டனர்.

2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்ரார்.

2006 - ஈழத்துக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2006 - வறுமைக்கு எதிரான அமைப்பு (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

2007 - நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

ஆகஸ்ட் 3

கிரிகோரியன் ஆண்டின் 215வது நாளாகும். நெட்டாண்டுகளில் 216வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன.

1858 - இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.

1975 - மொரோக்கோவில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 188 பேர் கொல்லப்பட்டனர்.

1990 - காத்தான்குடித் தாக்குதல் 1990: கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.

Saturday, August 2, 2008

ஆகஸ்ட் 2

கிரிகோரியன் ஆண்டின் 214வது நாளாகும். நெட்டாண்டுகளில் 215வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 151 நாட்கள் உள்ளன.

1914 - ஜேர்மனியப் படையினர் லக்சம்பேர்கை முற்றுகையிட்டன.

1916 - முதலாம் உலகப் போர்: லியனார்டோ டாவ்வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.

1918 - முதலாம் உலகப் போரை அடுத்து சைபீரியாவுக்கு தனது படைகளை அனுப்பப்போவதாக ஜப்பான் அறிவித்தது.

1922 - அலெக்சாண்டர் கிரஹாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் இறப்பு.

1989 - யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1990 - ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.

1994 - பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.

Friday, August 1, 2008

எங்கள் ஊர்மீது யார் கண்பட்டது?

எங்கள் ஊர்மீது யார் கண்பட்டது?
என் ஊர்மக்களை கைவிட்டாரா சிவபுரத்து சிவன் ? ?
வவுனிக்குளம் பாலையடிப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்முனை முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இத் தற்காப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 30 படையினர் பலியானதோடு மேலும் 60 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் மல்லாவியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் மும்முனைகளில் சிறீங்காப் படையினர் பாரிய முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர். படையினருக்கு ஆதரவாக எம்.ஐ 24 வானூர்தி உந்துகணைத் தாக்குதல்கள் நடத்த பல்குழல் வெடிகணை ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் பெரும் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்த நடைமுறையின் கீழ் போராளிகளால் தற்காப்பு முறியடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது படையினர் தரப்பில் 30க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 60 படையினருக்கு மேல் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பெரும் இழப்புகளை அடுத்து சிறீலங்காப் படையினர் தமது முன்னேற்ற முயற்சிகளைக் கைவிட்டு தமது பழைய நிலைகளுக்கு தப்பியோடியுள்ளனர்.