ஆகஸ்டு 13 கிரிகோரியன் ஆண்டின் 225வது நாளாகும். நெட்டாண்டுகளில் 226வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 140 நாட்கள் உள்ளன
1920 - போலந்து - சோவியத் ஒன்றியம் போர் ஆரம்பமாயிற்று. ஆகஸ்ட் 25 இல் முடிவடைந்த இப்போரில் செம்படையினர் தோற்றனர்.
1937 - ஷங்காய் சமர் ஆரம்பமானது.
1954 - பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.
1960 - மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1961 - ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு பேர்லினின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை மூடி கிழக்கு ஜேர்மனியினர் தப்பிச் செல்லாவண்ணம் பேர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.
2004 - கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
2004 - புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 - 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.
2006 - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2006 - அல்லைப்பிட்டியில் இலங்கை கடற்படையினர் மற்றும் துணை இராணுவக் குழுவினர் தமிழர் வீடுகளுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 மாதக் குழந்தை உட்பட 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment