Friday, August 1, 2008

எங்கள் ஊர்மீது யார் கண்பட்டது?

எங்கள் ஊர்மீது யார் கண்பட்டது?
என் ஊர்மக்களை கைவிட்டாரா சிவபுரத்து சிவன் ? ?
வவுனிக்குளம் பாலையடிப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்முனை முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இத் தற்காப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 30 படையினர் பலியானதோடு மேலும் 60 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் மல்லாவியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் மும்முனைகளில் சிறீங்காப் படையினர் பாரிய முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர். படையினருக்கு ஆதரவாக எம்.ஐ 24 வானூர்தி உந்துகணைத் தாக்குதல்கள் நடத்த பல்குழல் வெடிகணை ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் பெரும் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்த நடைமுறையின் கீழ் போராளிகளால் தற்காப்பு முறியடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது படையினர் தரப்பில் 30க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 60 படையினருக்கு மேல் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பெரும் இழப்புகளை அடுத்து சிறீலங்காப் படையினர் தமது முன்னேற்ற முயற்சிகளைக் கைவிட்டு தமது பழைய நிலைகளுக்கு தப்பியோடியுள்ளனர்.

No comments: