Saturday, September 27, 2008

யாரடா அவள் ?

இனியவளே!.
நலம், நாடலும் அஃதே.
உன் வரவை எதிர்பார்த்தபடியே
வானில் மேகக்கூட்டங்களுக்கு இடையே
தெரிந்த நட்சத்திரங்களை ஜன்னலின் வழியே
எண்ணிக்கொண்டிருந்த வேளை.. ..
காலை சில நிமிடங்களுக்கு
முன்தான் மொட்டுடைத்த
பூக்களோடு வருகிறான் பூக்காரன்.

வாடியதை எடுத்து கூடையிலே போட்டுவிட்டு
விற்பனைக்காய் பல வண்ணங்களோடு
வாசனைகளையும் விட்டுச் செல்கிறான்.

உறங்கிய கண்கள் உயிர்த்தன மெல்ல
அப்போதுதான் ஜனித்த ரோஜாக்கூட்டம்
கண்களைப் பறித்தன –அதிலொன்றை
சிவப்பாய் உனக்கென்றே வாங்குகிறேன்.

சூடிக்கொள்ள…. அருகில் நீ இல்லாததினால்
தலையணைக்குச் சூடி அதனோடு உறங்குகிறேன்
விழித்துப் பார்க்கையில்.. ..என் தலையைக் கோதியபடி
உன்னைத் திட்டுகிறது ரோஜா !

யாரடா அவள் ?
உன்னைத் தனியே
விட்டுவிட்டுநெடு
தூரத்தில் இருப்பவள் யாரடா..?
துரதிட்டக்காரி…!!

ஏய் ரோஜா..! போதும் நிறுத்து !!
சில மணிநேரம் மட்டுமே
என்னுடன் உறங்கிய நீ -விரைவில்
உதிர்ந்துவிடப்போகிறாய் ஏக்கத்தில்
என்னவளை ஏளனமாய்ப் பேசாதே.. !!

உயிருள்ள காலம்வரை என்னுடன்
உறங்கிவிட உரிமை கொண்டவள்
அவள்தான் என்றோ.. ?? -இறைவன்
சில மாதங்களுக்கு மட்டும்
பிரிவைத் தந்தான்.பிரிவினால்
எனது வெற்று உடல் எங்கும்
அவள்தான் நிறைந்துள்ளாள் காண்..!

வருவாள் விரைவில் என் மடிக்கு
அவள் வந்ததும்உனக்கிடமில்லை
என் வாசல் படிக்கு..!
அவள் சூடத்தான் உன்னை வாங்கினேன்
இனியும் வேண்டாம் தூரப்போ.. -நீ
பொறாமைக்காரி !!

ரோஜாதான் அவளும் எனக்கு
உங்களில் இல்லாத வண்ணமும் வாசமும்
அவள் தருவாள் என்று விரட்டினேன் ரோஜாவை.

எந்தப் பூவும் எமக்கு வேண்டாம்
பூவே! உனக்கு பூ எதற்கு?
வாடி என் அருகில் ஓடி,
உன்னைத் தேடி -நானும்
முடிக்கிறேன்பதில் கண்டு
தொடர்கிறேன்

- எதிர்பார்போடு காக்கும் காதலன் ..!

நீயும் என் தாய் !

விடியாது விரைந்துபோன -என்
இரவுகளுக்கு வெளிச்சம் கொடுத்து
விடியவைத்தவெண்ணிலவே..!

இன்று, என்னை ஒளிரவிட்டு -நீ
மட்டும் ஒளிந்து சென்றது ஏனடி..?
கட்டில் அடங்காத என்னையே
கட்டிப்போட்டு -நீ
மட்டும் எட்டிப்போனது ஏனடி..?

அழுகுரல் கேட்டு திறந்த -உன்
விழிகள் வியக்கிறது குழந்தை
அழாமல் உறங்குவதை பார்த்து..!

அழுவது உங்கள் குழந்தை அல்ல
உன்னால் பிறந்த உன் முதல் -குழந்தை
இந்த கவிஞனை பிரசவித்தது நீதானே..!!

ஆக்கம்: சிநேகிதன் கஜன்

இப்படியும் நட(ந்தது) க்கிறது!

கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அவளும்
எனக்கு அவளையும் அவளுக்கு என்னையும்
எங்கள் கண்கள்தான் அறிமுகம் செய்தன..

எங்களுள் ஜென்மபந்தம் இருப்பதாய் பேசிக்கொண்டன.
மூச்சுக்குழலும் இரத்தநாடிகளும் புதிய வேகம் பெற்றன
உண்மையிலேயே உருவமில்லா உருண்டயம் எனக்கும் உருண்டது

தொலைவில் நின்ற அவள் கடைப்பார்வையும்
கடந்து செல்கையில் அவள் கால்கொலுசும்
புதிதாய் எனக்கோ செய்திகள் சொன்னது
பிறப்பினுள் மீண்டுமோர்பிறப்பைத் தந்தது
எனக்கு முகவரி தந்த அவளது முகவரியை அறிய
ஆவலாய் அருகில் இருந்தநண்பனைக் கேட்டேன்

டேய்…! "அவள் என்னுடைய ஆள்"
சொன்னான் நண்பன்
செல்லக் கோபமாகவே
இப்போது, புரிந்தது
அவள் பார்த்தது என்னையல்ல
அவனை..!!

ஆக்கம்: சிநேகிதன் கஜன்

Wednesday, September 24, 2008

ஈழத்தில் போர் ? ?

ஈழத்தில் போர் ஓய்ந்து
கொடிமுல்லை பூ கொய்து
நீ சூட தரவேண்டுமே ..
தீ எரியும் வன்னிமண்ணில்
தென்றல் வரும் ஏ9 ல்
ஊர் கோலம் வரவேண்டுமே ...
வெடிகுண்டும் பூச்செண்டு
எனமாறும் திருநாளில் எம்
மண்மீது தலைசாய்த்து
உன்னோடு துயில் கொள்ளும்
வரம் வேண்டுமே .. .. ..!

Monday, September 1, 2008

செப்டம்பர் 1

செப்டம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 244வது நாளாகும். நெட்டாண்டுகளில் 245வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 121 நாட்கள் உள்ளன.

1715 - பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன்.

1752 - விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற அமெரிக்கப் படைகளை வேர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.

1894 - அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் கொல்லப்பட்டனர்.

1897 - வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

1914 - ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1914 - கடைசி பயணிக்கும் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.

1923 - டோக்கியோ மற்றும் யொகோஹாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105இ000 பேர் கொல்லப்பட்டனர்.

1928 - அகமெட் சோகு அல்பேனியா நாட்டை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.

1939 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி போலந்தைத் தாக்கி போரை ஆரம்பித்து வைத்தது.

1951 - ஐக்கிய அமெரிக்காஇ ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சஸ் ஒப்பந்தம்) செய்து கொண்டன.

1961 - எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது. ஹமீட் இட்ரிஸ் அவாட்டெ என்பவர் எதியோப்பியக் காவல்துறை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

1969 - அல் கடாஃபி புரட்சியின் மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1970 - ஜோர்தான் மன்னர் உசேன் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

1972 - ஐஸ்லாந்தில் இடம்பெற்ற உலக்க்க் சதுரங்கப் போட்டியில் அமெரிக்கரான பொபி ஃபிஷர் ரஷ்யரான பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்னத்தை வென்றார்.

1979 - நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21இ000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.

1981 - மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1983 - பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அமெரிக்க அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் லோரன்ஸ் மாக்டொனால்ட்டும் ஒருவர்.

1984 - யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1985 - அமெரிக்கஇ பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

1991 - உஸ்பெகிஸ்தான்இ சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி விடுதலையை அறிவித்தது.

2004 - ரஷ்யாவில் பெஸ்லான் நகரப் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று.

2007 - மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.