ஈழத்தில் போர் ஓய்ந்து
கொடிமுல்லை பூ கொய்து
நீ சூட தரவேண்டுமே ..
தீ எரியும் வன்னிமண்ணில்
தென்றல் வரும் ஏ9 ல்
ஊர் கோலம் வரவேண்டுமே ...
வெடிகுண்டும் பூச்செண்டு
எனமாறும் திருநாளில் எம்
மண்மீது தலைசாய்த்து
உன்னோடு துயில் கொள்ளும்
வரம் வேண்டுமே .. .. ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment