விடியாது விரைந்துபோன -என்
இரவுகளுக்கு வெளிச்சம் கொடுத்து
விடியவைத்தவெண்ணிலவே..!
இன்று, என்னை ஒளிரவிட்டு -நீ
மட்டும் ஒளிந்து சென்றது ஏனடி..?
கட்டில் அடங்காத என்னையே
கட்டிப்போட்டு -நீ
மட்டும் எட்டிப்போனது ஏனடி..?
அழுகுரல் கேட்டு திறந்த -உன்
விழிகள் வியக்கிறது குழந்தை
அழாமல் உறங்குவதை பார்த்து..!
அழுவது உங்கள் குழந்தை அல்ல
உன்னால் பிறந்த உன் முதல் -குழந்தை
இந்த கவிஞனை பிரசவித்தது நீதானே..!!
ஆக்கம்: சிநேகிதன் கஜன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"அழுவது உங்கள் குழந்தை அல்ல
உன்னால் பிறந்த உன் முதல் -குழந்தை
இந்த கவிஞனை பிரசவித்தது நீதானே"
very nice
"oru kavinan piranthan".... anthanaal kavinanai pirasavitha antha kavithakku nanty
Thanks.. Thenral..??
Post a Comment