Saturday, September 27, 2008

இப்படியும் நட(ந்தது) க்கிறது!

கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அவளும்
எனக்கு அவளையும் அவளுக்கு என்னையும்
எங்கள் கண்கள்தான் அறிமுகம் செய்தன..

எங்களுள் ஜென்மபந்தம் இருப்பதாய் பேசிக்கொண்டன.
மூச்சுக்குழலும் இரத்தநாடிகளும் புதிய வேகம் பெற்றன
உண்மையிலேயே உருவமில்லா உருண்டயம் எனக்கும் உருண்டது

தொலைவில் நின்ற அவள் கடைப்பார்வையும்
கடந்து செல்கையில் அவள் கால்கொலுசும்
புதிதாய் எனக்கோ செய்திகள் சொன்னது
பிறப்பினுள் மீண்டுமோர்பிறப்பைத் தந்தது
எனக்கு முகவரி தந்த அவளது முகவரியை அறிய
ஆவலாய் அருகில் இருந்தநண்பனைக் கேட்டேன்

டேய்…! "அவள் என்னுடைய ஆள்"
சொன்னான் நண்பன்
செல்லக் கோபமாகவே
இப்போது, புரிந்தது
அவள் பார்த்தது என்னையல்ல
அவனை..!!

ஆக்கம்: சிநேகிதன் கஜன்

No comments: