Saturday, September 27, 2008

நீயும் என் தாய் !

விடியாது விரைந்துபோன -என்
இரவுகளுக்கு வெளிச்சம் கொடுத்து
விடியவைத்தவெண்ணிலவே..!

இன்று, என்னை ஒளிரவிட்டு -நீ
மட்டும் ஒளிந்து சென்றது ஏனடி..?
கட்டில் அடங்காத என்னையே
கட்டிப்போட்டு -நீ
மட்டும் எட்டிப்போனது ஏனடி..?

அழுகுரல் கேட்டு திறந்த -உன்
விழிகள் வியக்கிறது குழந்தை
அழாமல் உறங்குவதை பார்த்து..!

அழுவது உங்கள் குழந்தை அல்ல
உன்னால் பிறந்த உன் முதல் -குழந்தை
இந்த கவிஞனை பிரசவித்தது நீதானே..!!

ஆக்கம்: சிநேகிதன் கஜன்

2 comments:

unarvukal said...

"அழுவது உங்கள் குழந்தை அல்ல
உன்னால் பிறந்த உன் முதல் -குழந்தை
இந்த கவிஞனை பிரசவித்தது நீதானே"

very nice

"oru kavinan piranthan".... anthanaal kavinanai pirasavitha antha kavithakku nanty

சிநேகிதன் கஜன் said...

Thanks.. Thenral..??