5 வயதில் தமிழ் படித்தேன் என் தாயிடம்
15 வயதில் தமிழ் கவி வடித்தேன் உன்னிடம்
25 வயதில் தத்துவம் பேச வைத்துவிட்டாய் பிறரிடம்
Thursday, December 25, 2008
பாலைவனப் பறவை
உலகில் பாலைவனம்
எப்படி வந்தது?
அதுவும் காதலித்து
தேகச் செழிப்பு இழந்ததா?
என்னைப்போல..!!
உன் கருங்குழல் கலைத்து
வீசும் தென்றல் குளிர்ந்து
பொழிகிறது - இந்த
பாலைவனப் பறவைக்குள்
மழையாய்..!!
எப்படி வந்தது?
அதுவும் காதலித்து
தேகச் செழிப்பு இழந்ததா?
என்னைப்போல..!!
உன் கருங்குழல் கலைத்து
வீசும் தென்றல் குளிர்ந்து
பொழிகிறது - இந்த
பாலைவனப் பறவைக்குள்
மழையாய்..!!
கனடாவில்
தொலைவாகிப் போன
உன் முகத்தை பார்க்கிறேன்
கனடாவில் பௌர்ணமியாக..!
கனடாவில் சூரியகாந்தி
மலர்வதில்லையாம்
நிலவுனக்கு ஒளிகொடுத்து
சூரியன் அணைந்துபோன
புதிய விஞ்ஞானம்
எழுதப்படுகிறது இங்கே..!
உன் முகத்தை பார்க்கிறேன்
கனடாவில் பௌர்ணமியாக..!
கனடாவில் சூரியகாந்தி
மலர்வதில்லையாம்
நிலவுனக்கு ஒளிகொடுத்து
சூரியன் அணைந்துபோன
புதிய விஞ்ஞானம்
எழுதப்படுகிறது இங்கே..!
Saturday, December 20, 2008
நிலவும் சூரிய குடும்பம்
தொலைவில் நின்றபோது
நிலவானாய் எனக்கு
நெருங்கி உனைத்தொட்டபோது
சுட்டது உன் விழிகள்
ஓ...
மறந்துவிட்டேன்
நிலவும் சூரிய குடும்பம்தானே..!
நிலவானாய் எனக்கு
நெருங்கி உனைத்தொட்டபோது
சுட்டது உன் விழிகள்
ஓ...
மறந்துவிட்டேன்
நிலவும் சூரிய குடும்பம்தானே..!
தமிழிலும் வல்லினம்
உன்னைக் கண்டபோது அறிந்தேன்
தமிழின் அழகை
உன் சிரிப்பொலி கேட்டபோது தெரிந்தேன்
தமிழிசையின் இனிமை
உன்னைத் தொடர்கையில் புரிந்தேன்
தமிழின் இடையினத்தை
மெல்லினத்தில் ஓர் கடிதம் வரைந்து;
உன்னிடம் தந்தபோதுதான் உணர்ந்தேன்
தமிழிலும் வல்லினம் உள்ளதென்பதை..!
தமிழின் அழகை
உன் சிரிப்பொலி கேட்டபோது தெரிந்தேன்
தமிழிசையின் இனிமை
உன்னைத் தொடர்கையில் புரிந்தேன்
தமிழின் இடையினத்தை
மெல்லினத்தில் ஓர் கடிதம் வரைந்து;
உன்னிடம் தந்தபோதுதான் உணர்ந்தேன்
தமிழிலும் வல்லினம் உள்ளதென்பதை..!
Thursday, November 13, 2008
ஏனடா தமிழா இப்படி ஆனாய்??
Scarborough Centreல் என்ன தமிழர் கூட்டம்..? கவனயீர்ப்பா.?? ஓ..! ஏகனின் 7:30 Show.
ஏனடா தமிழா இப்படி ஆனாய்??
ஈழத்தில் எவர் செத்தால் எமக்கென்ன..?? எங்கள் காசில் AC காரில் சுற்றி உண்ட உணவுக்கு ஏப்பம் வரவில்லையாம், உண்ணாநோன்புக்கு போகாவிட்டால் Swissல் இனி ஓரு படமும் ஓடாதாம், பயந்து ஓடி வந்து படம் காட்டிவிட்டார்கள்.
இனி, படம் பார்க்கலாம் நாங்கள் கனடாக்காரர்; எல்லோரையும் கூப்பிட்டுவிட்டோம். இனி, எமக்கு ஊர்ல யாருமில்லை. அப்ப படம் பார்க்கலாம்! எங்கட தலை AC காரில சுதந்திரமா சுத்தோணும் அதுக்கு நாங்க Dish அடிச்சும் கொடுப்போம்..! எவர் செத்தால் எமக்கென்ன..??
ஏனடா தமிழா இப்படி ஆனாய்??
ஈழத்தில் எவர் செத்தால் எமக்கென்ன..?? எங்கள் காசில் AC காரில் சுற்றி உண்ட உணவுக்கு ஏப்பம் வரவில்லையாம், உண்ணாநோன்புக்கு போகாவிட்டால் Swissல் இனி ஓரு படமும் ஓடாதாம், பயந்து ஓடி வந்து படம் காட்டிவிட்டார்கள்.
இனி, படம் பார்க்கலாம் நாங்கள் கனடாக்காரர்; எல்லோரையும் கூப்பிட்டுவிட்டோம். இனி, எமக்கு ஊர்ல யாருமில்லை. அப்ப படம் பார்க்கலாம்! எங்கட தலை AC காரில சுதந்திரமா சுத்தோணும் அதுக்கு நாங்க Dish அடிச்சும் கொடுப்போம்..! எவர் செத்தால் எமக்கென்ன..??
Saturday, September 27, 2008
யாரடா அவள் ?
இனியவளே!.
நலம், நாடலும் அஃதே.
உன் வரவை எதிர்பார்த்தபடியே
வானில் மேகக்கூட்டங்களுக்கு இடையே
தெரிந்த நட்சத்திரங்களை ஜன்னலின் வழியே
எண்ணிக்கொண்டிருந்த வேளை.. ..
காலை சில நிமிடங்களுக்கு
முன்தான் மொட்டுடைத்த
பூக்களோடு வருகிறான் பூக்காரன்.
வாடியதை எடுத்து கூடையிலே போட்டுவிட்டு
விற்பனைக்காய் பல வண்ணங்களோடு
வாசனைகளையும் விட்டுச் செல்கிறான்.
உறங்கிய கண்கள் உயிர்த்தன மெல்ல
அப்போதுதான் ஜனித்த ரோஜாக்கூட்டம்
கண்களைப் பறித்தன –அதிலொன்றை
சிவப்பாய் உனக்கென்றே வாங்குகிறேன்.
சூடிக்கொள்ள…. அருகில் நீ இல்லாததினால்
தலையணைக்குச் சூடி அதனோடு உறங்குகிறேன்
விழித்துப் பார்க்கையில்.. ..என் தலையைக் கோதியபடி
உன்னைத் திட்டுகிறது ரோஜா !
யாரடா அவள் ?
உன்னைத் தனியே
விட்டுவிட்டுநெடு
தூரத்தில் இருப்பவள் யாரடா..?
துரதிட்டக்காரி…!!
ஏய் ரோஜா..! போதும் நிறுத்து !!
சில மணிநேரம் மட்டுமே
என்னுடன் உறங்கிய நீ -விரைவில்
உதிர்ந்துவிடப்போகிறாய் ஏக்கத்தில்
என்னவளை ஏளனமாய்ப் பேசாதே.. !!
உயிருள்ள காலம்வரை என்னுடன்
உறங்கிவிட உரிமை கொண்டவள்
அவள்தான் என்றோ.. ?? -இறைவன்
சில மாதங்களுக்கு மட்டும்
பிரிவைத் தந்தான்.பிரிவினால்
எனது வெற்று உடல் எங்கும்
அவள்தான் நிறைந்துள்ளாள் காண்..!
வருவாள் விரைவில் என் மடிக்கு
அவள் வந்ததும்உனக்கிடமில்லை
என் வாசல் படிக்கு..!
அவள் சூடத்தான் உன்னை வாங்கினேன்
இனியும் வேண்டாம் தூரப்போ.. -நீ
பொறாமைக்காரி !!
ரோஜாதான் அவளும் எனக்கு
உங்களில் இல்லாத வண்ணமும் வாசமும்
அவள் தருவாள் என்று விரட்டினேன் ரோஜாவை.
எந்தப் பூவும் எமக்கு வேண்டாம்
பூவே! உனக்கு பூ எதற்கு?
வாடி என் அருகில் ஓடி,
உன்னைத் தேடி -நானும்
முடிக்கிறேன்பதில் கண்டு
தொடர்கிறேன்
- எதிர்பார்போடு காக்கும் காதலன் ..!
நலம், நாடலும் அஃதே.
உன் வரவை எதிர்பார்த்தபடியே
வானில் மேகக்கூட்டங்களுக்கு இடையே
தெரிந்த நட்சத்திரங்களை ஜன்னலின் வழியே
எண்ணிக்கொண்டிருந்த வேளை.. ..
காலை சில நிமிடங்களுக்கு
முன்தான் மொட்டுடைத்த
பூக்களோடு வருகிறான் பூக்காரன்.
வாடியதை எடுத்து கூடையிலே போட்டுவிட்டு
விற்பனைக்காய் பல வண்ணங்களோடு
வாசனைகளையும் விட்டுச் செல்கிறான்.
உறங்கிய கண்கள் உயிர்த்தன மெல்ல
அப்போதுதான் ஜனித்த ரோஜாக்கூட்டம்
கண்களைப் பறித்தன –அதிலொன்றை
சிவப்பாய் உனக்கென்றே வாங்குகிறேன்.
சூடிக்கொள்ள…. அருகில் நீ இல்லாததினால்
தலையணைக்குச் சூடி அதனோடு உறங்குகிறேன்
விழித்துப் பார்க்கையில்.. ..என் தலையைக் கோதியபடி
உன்னைத் திட்டுகிறது ரோஜா !
யாரடா அவள் ?
உன்னைத் தனியே
விட்டுவிட்டுநெடு
தூரத்தில் இருப்பவள் யாரடா..?
துரதிட்டக்காரி…!!
ஏய் ரோஜா..! போதும் நிறுத்து !!
சில மணிநேரம் மட்டுமே
என்னுடன் உறங்கிய நீ -விரைவில்
உதிர்ந்துவிடப்போகிறாய் ஏக்கத்தில்
என்னவளை ஏளனமாய்ப் பேசாதே.. !!
உயிருள்ள காலம்வரை என்னுடன்
உறங்கிவிட உரிமை கொண்டவள்
அவள்தான் என்றோ.. ?? -இறைவன்
சில மாதங்களுக்கு மட்டும்
பிரிவைத் தந்தான்.பிரிவினால்
எனது வெற்று உடல் எங்கும்
அவள்தான் நிறைந்துள்ளாள் காண்..!
வருவாள் விரைவில் என் மடிக்கு
அவள் வந்ததும்உனக்கிடமில்லை
என் வாசல் படிக்கு..!
அவள் சூடத்தான் உன்னை வாங்கினேன்
இனியும் வேண்டாம் தூரப்போ.. -நீ
பொறாமைக்காரி !!
ரோஜாதான் அவளும் எனக்கு
உங்களில் இல்லாத வண்ணமும் வாசமும்
அவள் தருவாள் என்று விரட்டினேன் ரோஜாவை.
எந்தப் பூவும் எமக்கு வேண்டாம்
பூவே! உனக்கு பூ எதற்கு?
வாடி என் அருகில் ஓடி,
உன்னைத் தேடி -நானும்
முடிக்கிறேன்பதில் கண்டு
தொடர்கிறேன்
- எதிர்பார்போடு காக்கும் காதலன் ..!
நீயும் என் தாய் !
விடியாது விரைந்துபோன -என்
இரவுகளுக்கு வெளிச்சம் கொடுத்து
விடியவைத்தவெண்ணிலவே..!
இன்று, என்னை ஒளிரவிட்டு -நீ
மட்டும் ஒளிந்து சென்றது ஏனடி..?
கட்டில் அடங்காத என்னையே
கட்டிப்போட்டு -நீ
மட்டும் எட்டிப்போனது ஏனடி..?
அழுகுரல் கேட்டு திறந்த -உன்
விழிகள் வியக்கிறது குழந்தை
அழாமல் உறங்குவதை பார்த்து..!
அழுவது உங்கள் குழந்தை அல்ல
உன்னால் பிறந்த உன் முதல் -குழந்தை
இந்த கவிஞனை பிரசவித்தது நீதானே..!!
ஆக்கம்: சிநேகிதன் கஜன்
இரவுகளுக்கு வெளிச்சம் கொடுத்து
விடியவைத்தவெண்ணிலவே..!
இன்று, என்னை ஒளிரவிட்டு -நீ
மட்டும் ஒளிந்து சென்றது ஏனடி..?
கட்டில் அடங்காத என்னையே
கட்டிப்போட்டு -நீ
மட்டும் எட்டிப்போனது ஏனடி..?
அழுகுரல் கேட்டு திறந்த -உன்
விழிகள் வியக்கிறது குழந்தை
அழாமல் உறங்குவதை பார்த்து..!
அழுவது உங்கள் குழந்தை அல்ல
உன்னால் பிறந்த உன் முதல் -குழந்தை
இந்த கவிஞனை பிரசவித்தது நீதானே..!!
ஆக்கம்: சிநேகிதன் கஜன்
இப்படியும் நட(ந்தது) க்கிறது!
கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அவளும்
எனக்கு அவளையும் அவளுக்கு என்னையும்
எங்கள் கண்கள்தான் அறிமுகம் செய்தன..
எங்களுள் ஜென்மபந்தம் இருப்பதாய் பேசிக்கொண்டன.
மூச்சுக்குழலும் இரத்தநாடிகளும் புதிய வேகம் பெற்றன
உண்மையிலேயே உருவமில்லா உருண்டயம் எனக்கும் உருண்டது
தொலைவில் நின்ற அவள் கடைப்பார்வையும்
கடந்து செல்கையில் அவள் கால்கொலுசும்
புதிதாய் எனக்கோ செய்திகள் சொன்னது
பிறப்பினுள் மீண்டுமோர்பிறப்பைத் தந்தது
எனக்கு முகவரி தந்த அவளது முகவரியை அறிய
ஆவலாய் அருகில் இருந்தநண்பனைக் கேட்டேன்
டேய்…! "அவள் என்னுடைய ஆள்"
சொன்னான் நண்பன்
செல்லக் கோபமாகவே
இப்போது, புரிந்தது
அவள் பார்த்தது என்னையல்ல
அவனை..!!
ஆக்கம்: சிநேகிதன் கஜன்
எனக்கு அவளையும் அவளுக்கு என்னையும்
எங்கள் கண்கள்தான் அறிமுகம் செய்தன..
எங்களுள் ஜென்மபந்தம் இருப்பதாய் பேசிக்கொண்டன.
மூச்சுக்குழலும் இரத்தநாடிகளும் புதிய வேகம் பெற்றன
உண்மையிலேயே உருவமில்லா உருண்டயம் எனக்கும் உருண்டது
தொலைவில் நின்ற அவள் கடைப்பார்வையும்
கடந்து செல்கையில் அவள் கால்கொலுசும்
புதிதாய் எனக்கோ செய்திகள் சொன்னது
பிறப்பினுள் மீண்டுமோர்பிறப்பைத் தந்தது
எனக்கு முகவரி தந்த அவளது முகவரியை அறிய
ஆவலாய் அருகில் இருந்தநண்பனைக் கேட்டேன்
டேய்…! "அவள் என்னுடைய ஆள்"
சொன்னான் நண்பன்
செல்லக் கோபமாகவே
இப்போது, புரிந்தது
அவள் பார்த்தது என்னையல்ல
அவனை..!!
ஆக்கம்: சிநேகிதன் கஜன்
Wednesday, September 24, 2008
ஈழத்தில் போர் ? ?
ஈழத்தில் போர் ஓய்ந்து
கொடிமுல்லை பூ கொய்து
நீ சூட தரவேண்டுமே ..
தீ எரியும் வன்னிமண்ணில்
தென்றல் வரும் ஏ9 ல்
ஊர் கோலம் வரவேண்டுமே ...
வெடிகுண்டும் பூச்செண்டு
எனமாறும் திருநாளில் எம்
மண்மீது தலைசாய்த்து
உன்னோடு துயில் கொள்ளும்
வரம் வேண்டுமே .. .. ..!
கொடிமுல்லை பூ கொய்து
நீ சூட தரவேண்டுமே ..
தீ எரியும் வன்னிமண்ணில்
தென்றல் வரும் ஏ9 ல்
ஊர் கோலம் வரவேண்டுமே ...
வெடிகுண்டும் பூச்செண்டு
எனமாறும் திருநாளில் எம்
மண்மீது தலைசாய்த்து
உன்னோடு துயில் கொள்ளும்
வரம் வேண்டுமே .. .. ..!
Monday, September 1, 2008
செப்டம்பர் 1
செப்டம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 244வது நாளாகும். நெட்டாண்டுகளில் 245வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 121 நாட்கள் உள்ளன.
1715 - பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன்.
1752 - விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது.
1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற அமெரிக்கப் படைகளை வேர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.
1894 - அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் கொல்லப்பட்டனர்.
1897 - வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
1914 - ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1914 - கடைசி பயணிக்கும் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.
1923 - டோக்கியோ மற்றும் யொகோஹாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105இ000 பேர் கொல்லப்பட்டனர்.
1928 - அகமெட் சோகு அல்பேனியா நாட்டை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.
1939 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி போலந்தைத் தாக்கி போரை ஆரம்பித்து வைத்தது.
1951 - ஐக்கிய அமெரிக்காஇ ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சஸ் ஒப்பந்தம்) செய்து கொண்டன.
1961 - எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது. ஹமீட் இட்ரிஸ் அவாட்டெ என்பவர் எதியோப்பியக் காவல்துறை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
1969 - அல் கடாஃபி புரட்சியின் மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1970 - ஜோர்தான் மன்னர் உசேன் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
1972 - ஐஸ்லாந்தில் இடம்பெற்ற உலக்க்க் சதுரங்கப் போட்டியில் அமெரிக்கரான பொபி ஃபிஷர் ரஷ்யரான பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்னத்தை வென்றார்.
1979 - நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21இ000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.
1981 - மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1983 - பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அமெரிக்க அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் லோரன்ஸ் மாக்டொனால்ட்டும் ஒருவர்.
1984 - யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1985 - அமெரிக்கஇ பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1991 - உஸ்பெகிஸ்தான்இ சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி விடுதலையை அறிவித்தது.
2004 - ரஷ்யாவில் பெஸ்லான் நகரப் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று.
2007 - மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1715 - பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன்.
1752 - விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது.
1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற அமெரிக்கப் படைகளை வேர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.
1894 - அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் கொல்லப்பட்டனர்.
1897 - வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
1914 - ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1914 - கடைசி பயணிக்கும் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.
1923 - டோக்கியோ மற்றும் யொகோஹாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105இ000 பேர் கொல்லப்பட்டனர்.
1928 - அகமெட் சோகு அல்பேனியா நாட்டை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.
1939 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி போலந்தைத் தாக்கி போரை ஆரம்பித்து வைத்தது.
1951 - ஐக்கிய அமெரிக்காஇ ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சஸ் ஒப்பந்தம்) செய்து கொண்டன.
1961 - எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது. ஹமீட் இட்ரிஸ் அவாட்டெ என்பவர் எதியோப்பியக் காவல்துறை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
1969 - அல் கடாஃபி புரட்சியின் மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1970 - ஜோர்தான் மன்னர் உசேன் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
1972 - ஐஸ்லாந்தில் இடம்பெற்ற உலக்க்க் சதுரங்கப் போட்டியில் அமெரிக்கரான பொபி ஃபிஷர் ரஷ்யரான பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்னத்தை வென்றார்.
1979 - நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21இ000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.
1981 - மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1983 - பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அமெரிக்க அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் லோரன்ஸ் மாக்டொனால்ட்டும் ஒருவர்.
1984 - யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1985 - அமெரிக்கஇ பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1991 - உஸ்பெகிஸ்தான்இ சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி விடுதலையை அறிவித்தது.
2004 - ரஷ்யாவில் பெஸ்லான் நகரப் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று.
2007 - மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
Monday, August 18, 2008
Sunday, August 17, 2008
I was in Montreal
Montreal is the largest city in Quebec and the second largest in Canada, with a metropolitan population of more than 3,360,000. Montreal is among the oldest cities on the continent, its history a rich backdrop to its vibrant multicultural life.
Montreal’s climate varies a lot over the year. The city is known for its cold winters, but its summers are hot and generally sunny. May to October are arguably the most pleasant months for outdoor activities and walking.
Saturday, August 16, 2008
Wednesday, August 13, 2008
ஆகஸ்டு 13
ஆகஸ்டு 13 கிரிகோரியன் ஆண்டின் 225வது நாளாகும். நெட்டாண்டுகளில் 226வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 140 நாட்கள் உள்ளன
1920 - போலந்து - சோவியத் ஒன்றியம் போர் ஆரம்பமாயிற்று. ஆகஸ்ட் 25 இல் முடிவடைந்த இப்போரில் செம்படையினர் தோற்றனர்.
1937 - ஷங்காய் சமர் ஆரம்பமானது.
1954 - பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.
1960 - மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1961 - ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு பேர்லினின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை மூடி கிழக்கு ஜேர்மனியினர் தப்பிச் செல்லாவண்ணம் பேர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.
2004 - கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
2004 - புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 - 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.
2006 - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2006 - அல்லைப்பிட்டியில் இலங்கை கடற்படையினர் மற்றும் துணை இராணுவக் குழுவினர் தமிழர் வீடுகளுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 மாதக் குழந்தை உட்பட 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
1920 - போலந்து - சோவியத் ஒன்றியம் போர் ஆரம்பமாயிற்று. ஆகஸ்ட் 25 இல் முடிவடைந்த இப்போரில் செம்படையினர் தோற்றனர்.
1937 - ஷங்காய் சமர் ஆரம்பமானது.
1954 - பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.
1960 - மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1961 - ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு பேர்லினின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை மூடி கிழக்கு ஜேர்மனியினர் தப்பிச் செல்லாவண்ணம் பேர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.
2004 - கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
2004 - புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 - 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.
2006 - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2006 - அல்லைப்பிட்டியில் இலங்கை கடற்படையினர் மற்றும் துணை இராணுவக் குழுவினர் தமிழர் வீடுகளுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 மாதக் குழந்தை உட்பட 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
Tuesday, August 12, 2008
ஆகஸ்டு 12
கிமு 30 - மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள்.
1281 - மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கானின் கடற்படைகள் ஜப்பானை அணுகும் போது சூறாவளியில் சிக்குண்டு இறந்தனர்.
1480 - ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்ளாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.
1499 - வெனிசியர்களுக்கும் ஒட்டோமான் துருக்கியர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.
1851 - ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1853 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.
1877 - அசாப் ஹோல் என்பவர் செவ்வாய்க் கோளின் டெய்மோஸ் என்ற சந்திரனைக் கண்டுபிடித்தார்.
1883 - கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.
1914 - முதலாம் உலகப் போர்: பிரித்தானியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. பிரித்தானிய இராச்சியதின் அனைத்து குடியேற்ற நாடுகளும் இதனுள் அடங்கின.
1952 - மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள்இ கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.
1953 - சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
1960 - எக்கோ ஐ என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
1964 - இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.
1978 - ஜப்பானும் மக்கள் சீனக் குடியரசும் தமக்கிடையே நட்புறவுஇ அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1981 - ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.
1985 - ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதிக் கொண்டதில் 520 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காப்பாற்றப்பட்டனர்.
1985 - ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1990 - வீரமுனைப் படுகொலைகள்இ 1990: அம்பாறைஇ வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990 - அமெரிக்காஇ தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
2000 - கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.
2005 - ஸ்ரீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில்இ நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.
2005 - மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.
2005 - இலங்கையின் தமிழ் வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.
1281 - மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கானின் கடற்படைகள் ஜப்பானை அணுகும் போது சூறாவளியில் சிக்குண்டு இறந்தனர்.
1480 - ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்ளாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.
1499 - வெனிசியர்களுக்கும் ஒட்டோமான் துருக்கியர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.
1851 - ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1853 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.
1877 - அசாப் ஹோல் என்பவர் செவ்வாய்க் கோளின் டெய்மோஸ் என்ற சந்திரனைக் கண்டுபிடித்தார்.
1883 - கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.
1914 - முதலாம் உலகப் போர்: பிரித்தானியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. பிரித்தானிய இராச்சியதின் அனைத்து குடியேற்ற நாடுகளும் இதனுள் அடங்கின.
1952 - மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள்இ கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.
1953 - சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
1960 - எக்கோ ஐ என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
1964 - இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.
1978 - ஜப்பானும் மக்கள் சீனக் குடியரசும் தமக்கிடையே நட்புறவுஇ அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1981 - ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.
1985 - ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதிக் கொண்டதில் 520 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காப்பாற்றப்பட்டனர்.
1985 - ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1990 - வீரமுனைப் படுகொலைகள்இ 1990: அம்பாறைஇ வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990 - அமெரிக்காஇ தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
2000 - கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.
2005 - ஸ்ரீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில்இ நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.
2005 - மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.
2005 - இலங்கையின் தமிழ் வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.
ஆகஸ்டு 11
1812 - இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.
1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.
1965 - கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1968 - பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.
1972 - வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர்.1984 - வானொலி ஒன்றிற்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களேஇ ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்".
1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
2003 - ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.
2006 - யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.
1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.
1965 - கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1968 - பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.
1972 - வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர்.1984 - வானொலி ஒன்றிற்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களேஇ ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்".
1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
2003 - ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.
2006 - யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.
Sunday, August 10, 2008
ஆகஸ்டு 10
1904 - ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.
1913 - பால்கான் போர்கள்: பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் ந்கரில் அமைதி உடன்பாட்டை எட்டின.
1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1948 - ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார்.
1990 - மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.
2000 - உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது (www.ibiblio.org தரவின் படி)
2003 - யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமனம் புரிந்த முதலாவது மனிதர்.
2006 - திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
1913 - பால்கான் போர்கள்: பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் ந்கரில் அமைதி உடன்பாட்டை எட்டின.
1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1948 - ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார்.
1990 - மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.
2000 - உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது (www.ibiblio.org தரவின் படி)
2003 - யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமனம் புரிந்த முதலாவது மனிதர்.
2006 - திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
Friday, August 8, 2008
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைப்பெறும்.
கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைப்பெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும்.
உத்தியோகபட்ச அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது நகரில் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். mascotகளாக ஒலிம்பிக்கின் ஐந்து நிறங்களிலான ஐந்து "புவாக்கள்" தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இம்முறை போடிகளில் குறிக்கோளாக "ஒரே கனவு ஒரே உலகம்" தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Tuesday, August 5, 2008
ஆகஸ்ட் 5
1100 - இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி முடி சூடினான்.
1305 - இங்கிலாந்துக்கு எதிராகக் கிளர்ச்சிக்குத்தலைமை வகித்த வில்லியம் வொலஸ் கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
1583 - சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜோன்ஸ்இ நியூபவுண்லாந்தில் அமைத்தார்.
1689 - 1500 இரக்கேசுக்கள் கியூபெக்கின் லாச்சின் நகரைத் தாக்கினர்.
1806 - இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.
1870 - புருசியர்களுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் புருசியா வெற்றி பெற்றது.
1884 - விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.
1914 - ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தைல் கைச்சாத்திட்டன.
1940 - இரண்டாம் உலகப் போர்: லாத்வியா சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1943 - இரண்டாம் உலகப் போர்: ட்ரொய்னா என்ற இடத்தில் போர் இடம்பெற்ற போது காலை 11:00 மணிக்கு எட்னா மலை வெடித்தது. இதன் புகை மண்டலம் பல மைல் உயாரத்துக்குக் கிளம்பியது.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியாஇ நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 545 ஜப்பானிய போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் செல்ல எத்தனித்தனர்.
1944 - போலந்து தீவிரவாதிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்த ஜேர்மனிய தொழிற் பண்ணையொன்றில் இருந்து 348 யூதர்களை விடுவித்தனர்.
1949 - எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6000 பேர் கொல்லப்பட்டனர். 50 நகரங்கள் அழிந்தன.
1960 - புர்கினா பாசோ (அப்பர் வோல்ட்டா) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1962 - 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.
1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்ஜெலீசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1963 - ஐக்கிய அமெரிக்காஇ சோவியத் ஒன்றியம்இ ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம் விண்வெளி மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.
1969 - மரைனர் 7 செவ்வார்க் கோளிக்கு மிகக் கிட்டவாக (3இ524 கிமீ) சென்றது.
1979 - ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.
1989 - நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.
2003 - இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
_________________________________________________________________
பிறப்புக்கள்
1850 - மாப்பசான்இ பிரெஞ்சு எழுத்தாளர் ( 1893)
1908 - ஹரல்ட் ஹோல்ட்இ ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமர் (1967)
1923 - தேவன் நாயர்இ சிங்கப்பூர் அதிபர்
1930 - நீல் ஆம்ஸ்ட்றோங் சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர்
1968 - நளாயினி தாமரைச்செல்வன் ஈழத்து எழுத்தாளர்
1975 - கஜோல் இந்தித் திரைப்பட நடிகை
1987 - ஜெனிலியா இந்தியத் திரைப்பட நடிகை
1305 - இங்கிலாந்துக்கு எதிராகக் கிளர்ச்சிக்குத்தலைமை வகித்த வில்லியம் வொலஸ் கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
1583 - சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜோன்ஸ்இ நியூபவுண்லாந்தில் அமைத்தார்.
1689 - 1500 இரக்கேசுக்கள் கியூபெக்கின் லாச்சின் நகரைத் தாக்கினர்.
1806 - இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.
1870 - புருசியர்களுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் புருசியா வெற்றி பெற்றது.
1884 - விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.
1914 - ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தைல் கைச்சாத்திட்டன.
1940 - இரண்டாம் உலகப் போர்: லாத்வியா சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1943 - இரண்டாம் உலகப் போர்: ட்ரொய்னா என்ற இடத்தில் போர் இடம்பெற்ற போது காலை 11:00 மணிக்கு எட்னா மலை வெடித்தது. இதன் புகை மண்டலம் பல மைல் உயாரத்துக்குக் கிளம்பியது.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியாஇ நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 545 ஜப்பானிய போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் செல்ல எத்தனித்தனர்.
1944 - போலந்து தீவிரவாதிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்த ஜேர்மனிய தொழிற் பண்ணையொன்றில் இருந்து 348 யூதர்களை விடுவித்தனர்.
1949 - எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6000 பேர் கொல்லப்பட்டனர். 50 நகரங்கள் அழிந்தன.
1960 - புர்கினா பாசோ (அப்பர் வோல்ட்டா) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1962 - 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.
1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்ஜெலீசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1963 - ஐக்கிய அமெரிக்காஇ சோவியத் ஒன்றியம்இ ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம் விண்வெளி மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.
1969 - மரைனர் 7 செவ்வார்க் கோளிக்கு மிகக் கிட்டவாக (3இ524 கிமீ) சென்றது.
1979 - ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.
1989 - நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.
2003 - இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
_________________________________________________________________
பிறப்புக்கள்
1850 - மாப்பசான்இ பிரெஞ்சு எழுத்தாளர் ( 1893)
1908 - ஹரல்ட் ஹோல்ட்இ ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமர் (1967)
1923 - தேவன் நாயர்இ சிங்கப்பூர் அதிபர்
1930 - நீல் ஆம்ஸ்ட்றோங் சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர்
1968 - நளாயினி தாமரைச்செல்வன் ஈழத்து எழுத்தாளர்
1975 - கஜோல் இந்தித் திரைப்பட நடிகை
1987 - ஜெனிலியா இந்தியத் திரைப்பட நடிகை
Monday, August 4, 2008
ஆகஸ்ட் 4
1860 - இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார்.
1902 - தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.
1906 - சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.
1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மன் பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஐக்கிய இராச்சியம் ஜெர்மனியின் மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது.
1916 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியுடன் லைபீரியா போர் தொடுத்தது.
1936 - கிரேக்கத் தளபதி இயோனிஸ் மெட்டாக்சஸ் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவனாக அறிவித்தான்.
1946 - வடக்கு டொமினிக்கன் குடியரசில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டு 2000 பேர் வீடுகளை இழந்தனர்.
1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்களான மைக்கல் ஷ்வேர்னர் ஆண்ட்ரூ குட்மன் ஜேம்ஸ் சானி ஆகியோர் மிசிசிப்பியில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். இவர்கள் ஜூன் 21 இல் காணாமல் போயிருந்தனர்.
1975 - மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஜப்பானிய செம்படையினர் AIA கட்டிடத்தைத் தாக்கி அமெரிக்கத் தூதுவர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர்.
1984 - அப்பர் வோல்ட்டா ஆபிரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1987 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.
1991 - "ஓசியானோஸ்" என்ற கிரேக்க கப்பல் தென்னாபிரிக்காவில் மூழ்கியது. அனைத்து 571 பயணிகளும் காப்பாற்றப்பட்டனர்.
2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்ரார்.
2006 - ஈழத்துக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2006 - வறுமைக்கு எதிரான அமைப்பு (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
2007 - நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1902 - தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.
1906 - சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.
1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மன் பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஐக்கிய இராச்சியம் ஜெர்மனியின் மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது.
1916 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியுடன் லைபீரியா போர் தொடுத்தது.
1936 - கிரேக்கத் தளபதி இயோனிஸ் மெட்டாக்சஸ் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவனாக அறிவித்தான்.
1946 - வடக்கு டொமினிக்கன் குடியரசில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டு 2000 பேர் வீடுகளை இழந்தனர்.
1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்களான மைக்கல் ஷ்வேர்னர் ஆண்ட்ரூ குட்மன் ஜேம்ஸ் சானி ஆகியோர் மிசிசிப்பியில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். இவர்கள் ஜூன் 21 இல் காணாமல் போயிருந்தனர்.
1975 - மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஜப்பானிய செம்படையினர் AIA கட்டிடத்தைத் தாக்கி அமெரிக்கத் தூதுவர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர்.
1984 - அப்பர் வோல்ட்டா ஆபிரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1987 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.
1991 - "ஓசியானோஸ்" என்ற கிரேக்க கப்பல் தென்னாபிரிக்காவில் மூழ்கியது. அனைத்து 571 பயணிகளும் காப்பாற்றப்பட்டனர்.
2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்ரார்.
2006 - ஈழத்துக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2006 - வறுமைக்கு எதிரான அமைப்பு (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
2007 - நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
ஆகஸ்ட் 3
கிரிகோரியன் ஆண்டின் 215வது நாளாகும். நெட்டாண்டுகளில் 216வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன.
1858 - இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.
1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.
1975 - மொரோக்கோவில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 188 பேர் கொல்லப்பட்டனர்.
1990 - காத்தான்குடித் தாக்குதல் 1990: கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.
1858 - இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.
1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.
1975 - மொரோக்கோவில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 188 பேர் கொல்லப்பட்டனர்.
1990 - காத்தான்குடித் தாக்குதல் 1990: கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.
Saturday, August 2, 2008
ஆகஸ்ட் 2
கிரிகோரியன் ஆண்டின் 214வது நாளாகும். நெட்டாண்டுகளில் 215வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 151 நாட்கள் உள்ளன.
1914 - ஜேர்மனியப் படையினர் லக்சம்பேர்கை முற்றுகையிட்டன.
1916 - முதலாம் உலகப் போர்: லியனார்டோ டாவ்வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.
1918 - முதலாம் உலகப் போரை அடுத்து சைபீரியாவுக்கு தனது படைகளை அனுப்பப்போவதாக ஜப்பான் அறிவித்தது.
1922 - அலெக்சாண்டர் கிரஹாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் இறப்பு.
1989 - யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1990 - ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.
1994 - பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
1914 - ஜேர்மனியப் படையினர் லக்சம்பேர்கை முற்றுகையிட்டன.
1916 - முதலாம் உலகப் போர்: லியனார்டோ டாவ்வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.
1918 - முதலாம் உலகப் போரை அடுத்து சைபீரியாவுக்கு தனது படைகளை அனுப்பப்போவதாக ஜப்பான் அறிவித்தது.
1922 - அலெக்சாண்டர் கிரஹாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் இறப்பு.
1989 - யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1990 - ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.
1994 - பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
Friday, August 1, 2008
எங்கள் ஊர்மீது யார் கண்பட்டது?
எங்கள் ஊர்மீது யார் கண்பட்டது?
என் ஊர்மக்களை கைவிட்டாரா சிவபுரத்து சிவன் ? ?
வவுனிக்குளம் பாலையடிப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்முனை முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இத் தற்காப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 30 படையினர் பலியானதோடு மேலும் 60 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் மல்லாவியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் மும்முனைகளில் சிறீங்காப் படையினர் பாரிய முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர். படையினருக்கு ஆதரவாக எம்.ஐ 24 வானூர்தி உந்துகணைத் தாக்குதல்கள் நடத்த பல்குழல் வெடிகணை ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் பெரும் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்த நடைமுறையின் கீழ் போராளிகளால் தற்காப்பு முறியடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது படையினர் தரப்பில் 30க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 60 படையினருக்கு மேல் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பெரும் இழப்புகளை அடுத்து சிறீலங்காப் படையினர் தமது முன்னேற்ற முயற்சிகளைக் கைவிட்டு தமது பழைய நிலைகளுக்கு தப்பியோடியுள்ளனர்.
Monday, May 19, 2008
சிநேகமானவர்களே!
இணைய தமிழ் உறவுகளே வணக்கம்! உங்கள் வரவுக்கு நன்றி!!
பலருக்கு இந்த பணி ஒரு விபத்து. எனக்கோ இது பல வருடத் தவம். வெறும் 60 குடியிருப்புக்களே கொண்ட சிற்றூர் சிவபுரம். நான் மண் விளையாடி மகிழ்ந்த பூமி அது. என் வாழ்வுக்கு இரண்டு தெய்வங்கள் அன்னை பராசக்தி, தந்தை கணேசலிங்கம். மூத்தபிள்ளை என்று என்னை அன்னை யாழ் வைத்தியசாலையில் பெற்றாலும் ஊர்ந்து, தவழ்ந்து, எழுந்து நடந்து ஊஞ்சலாடி மகிழ்ந்த பூமி என் சிவபுரம். கண்பட்டுவிடாமல் என்னூரை காப்பது சீதளாம்பிகையுடன் வீற்றிருக்கும் சிவபுரநாதர்தான். 30 வருட கொடிய வரலாற்றில் இதுவரை என் ஊர்மக்களை காப்பது எங்களுர் சிவபுரத்தரசன்தான்.
1987 இலங்கை வானொலியின் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பொங்கும் பூங்குழல் நிகழ்ச்சிகளை மீள என் குரலால் ஒலிபெருக்கி காட்டியதால் தாய் மாமா மனதை கவர்ந்து, கொழும்பு இந்துக் கல்லூரியில் கல்விபயில வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும் ஆசைப்பட்ட திறமைக்குரிய வாய்ப்பு படிக்கும் வரை கிடைக்கிவில்லை. காலச் சுழற்ச்சி பலரைப் போல் எனக்கும் திரைகடல் ஓடி திரவியம் தேடவேண்டிய சூழலை ஏற்படுத்தியது.
1997 London IBC யின் உதயம். புலம் பெயர்ந்த செவிகளுக்கு புதுப்பாலம் அமைத்தது. நெருங்கிய நேயர் என்றாலும் ஏனோ என் மழலை வயதுக் கனவு இங்கும் பலிக்கவில்லை. 2000 ஆண்டில் மீண்டும் ஓர் பெயர்வு, இறுதியாய் கரையேறியது கனடாவில், கனவு பலித்தது! 2001 அலையின் கரங்கள் அழைத்தது. இருக்கும் திறமைகளை எடுத்தியம்பு பக்கம் இருக்கிறோம் நாங்கள், என உற்சாகமூட்டினார் வி.ஆனந் அலையோசையின் அதிபர். 20தில் மீண்டும் பிறப்பு.
மழலைக் கனவுகள் யாவும் மகிழ்வோடு பெயர்ந்த மண்ணின் காற்றுகளில் பரப்பி ஆனந்தம் அடைந்தேன். ஓலிப்பரப்பு துறையில் பல வித்தைகளை விளங்கப்படுத்தியவர் விஜய் ஆனந், செய்திவாசிப்பின் செய்திகளை செவியூடாய் ஊற்றியவர்ளு.பாலச்சந்திரன் ஆரம்பகால நிகழ்வுகளில் பாடல்களுக்கு இடையே கவித்துளிகளைச் சேர்த்து சொல்வது எப்படி? என கற்றுக்கொடுத்தவர் S.சுதன். இப்போது பாரிசில் படலைக்கு படலை உருவாக்கத்தில் பளுவாக இருந்தாலும் அன்று முதல் இன்று வரை அழைத்து கலைத்துறை முன்னேற்றங்களை பாராட்டும் நண்பர்.
கலைச்சேவையின் கடந்த கால அனுபவங்களை பக்குவமாய் எனக்கு மனங்களில் புகுத்தி பல புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்க உதவியவர் மரியாதைக்குரிய சாதாரண மனிதன் பரம் ஞானேஸ்வரன்.
அலையோசை வானொலியில் இணையும் போது சனி அதிகாலை வெறும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே என் நிகழ்ச்சியினை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அரை மணிப்பொழுதில் என் அன்னைக்கு புகழ்பாடும் நிகழ்ச்சியினை வழங்கினேன். உயிரினம் அனைத்தும் அனுமதிகேட்காமல் அன்பு வைத்திருக்கும் ஓர் உயிர் அன்னை. சிறுவயதிலேயே என் தாயை இழந்துவிட்டதால் உண்டான தாக்கம் அந்நிகழ்ச்சியில் நிறைந்திருந்தமையால் அலையோசையின் அன்பு உறவுகள் மனதில் இலகுவாய் இடம் கிடைத்தது. அனைவரும் தங்கள் தாயை நினைத்துப் பார்க்க அந்த அரை மணிப்பொழுது பிடித்துப்போனது.
ஒரு மாத கால இடைவெளியின் பின் 6 மணிநேர வானொலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை அலையோசை தந்தது. மழைத்துளிகள், நிலாமுற்றம், இசையும் கதையும், கவிப்புனல், இசைப்புனல் என புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கினேன்.
சமகால சமூக நிகழ்வுகளை கண்ணுற்று ஓர் இளைஞனின் பேனாமொழிப் பேச்சாக எனது எழுத்தாற்றலை ஊக்குவித்து மன உணர்வுகளை சுதந்திரமாக வெளியிடவும் கண்டு கேட்டு கற்றறிந்த தகவல்களை உரிமையோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய பல்சுவை ஆக்கப்படைப்பாய் உருவானதுதான் மழைத்துளிகள். வானில் இருந்து பொழிகின்ற நீர்த்துளிகள் அல்ல இது, இளைஞனின் பேனா மைத்துளிகள். மழை பொழிந்து ஓய்ந்தபின் மண்மேல் நீர் காய்ந்தாலும் எவ்வாறு மண் அடியில் ஈரம் எஞ்சுகிறதோ அதுபோல் இந் நிகழ்ச்சி ஓய்ந்த பின் மனங்களில் நிகழ்வின் கரு ஆழப்பதியும் என்பதுதான் மழைத்துளிகள் பற்றிய சிறு விளக்கம்.
இசையும் கதையும் பல வானொலிகளில் இடம் பெருகின்ற அதே வகைதான், சிறுகதைகளுக்கிடையே அந்த கதைக்கேற்ற பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சி. இசைப்புனல் பாடல்கள் உருவான உருவாக்கப்பட்ட சுவையான வரலாறுகளை கூறும் நிகழ்வாகவும், கவிப்புனல் எனதும் நேய நெஞ்சங்களினதும் கவி ஆர்வத்தை வெளிக் கொண்டுவரும் நிகழ்வாகவும் அமைந்தது. கனடாவில் காலை 7 மணியிலிருந்து 8 மணிவரை ஒலிக்கும் பொங்கும் பூபாளத்தின் மீது காதல் கொண்டு இருந்த காரணத்தால் அலையோசையின் காலைத்தென்றல் நிகழ்ச்சியூடாய் பாடலுக்கு முன் இருவரிக் கவிதை சொல்லி அந்நிகழ்ச்சியை சிறப்பிக்க கூடியதாக இருந்தது.
வானொலிக்கு ஆக்கங்களை எழுதும்போது சோகப்பாடல்களை கேட்டுக்கொண்டே எழுதுகின்ற பழக்கம் எனக்குள் இருக்கின்றது. பொதுவாக தாயின் நினைவுகளை சுமந்த பாடல்களை கேட்டது வழக்கம். மாறாக சோக காதல் பாடல்களை அதிகம் கேட்டால் இனிமையான காதல் படைப்பு ஒன்றை எழுதி முடித்து விடுவேன்.
அழகாய் அமைதியாய் சென்றுகொண்டிந்த அலையோசை வானொலிப் பயணம் தவிர்க்க முடியாத காரணத்தால் தடைப்பட்டது.
ஆனாலும் ஒரு சில நாட்கள் இடைவெளியின் பின் அலையோசையிலும் அதன் நேயர்களின் மீதும் கொண்டிருந்த அன்பினால் கனேடிய மண்ணுக்கு பல அறிவிப்பாளர்களையும், வானொலி நிலைய அதிபர்களையும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களையும், பத்திரிகை ஆசிரியர்களையும் உருவாக்கிய தமிழோசை வானொலியின் அதிபர் சிறிஸ்காந்தா மீண்டும் தழிழோசைக்கு உயிர் கொடுத்தார். அலையோசையில் பணிபுரிந்த அனைவரையும் அரவணைத்து தமிழோசை வானொலியை தொடர்ந்தார்.
ஆவணி 2003 இருந்து இன்றுவரை AM1430 அலைவரிசையூடாகவும் சீரிஓஆர்.(http://www.ctor.ca/) என்ற இணைய முகவரியூடாகவும் வெற்றி நடைபோடும் தமிழோசையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் பணிபுரிந்துகொண்டிருப்பதில் பெருமையடைகின்றேன்.
வான்பரப்பில் காற்றிலே குரல் தவழ்ந்த காலத்திற்கும் சற்று உயர்வாய் வாழ் பரப்பில் மேடை அறிவிப்பாளராக உங்கள் செவிகளுக்கு அருகில் இருந்து செய்தி சொல்கின்ற புதிய அனுபவத்தை தமிழோசை தந்தது. கடந்த இகை;குயில் நிகழ்ச்சியையும் வடிவமைத்து ஒருங்கிணைத்து இறுதிப்போட்டிக்கு பாடகர்களை அழைத்துச் சென்ற புதிய பணியை தமிழோசை எனக்ளித்து பெருமை சேர்த்துத் தந்தது. ஒரு தரமான மேடை நிகழ்ச்சியை மக்கள் முன் எடுத்துவர எத்தனை பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்ற புதிய அனுபவத்தை பெற்றுக்கொடுத்தது.
அனைவரும் இந்திய மண்ணுக்கு சென்று சந்திக்க விரும்பும் பல கலைஞர்;களை தமிழோசை வானொலி மூலம் கனேடிய மண்ணில் சந்தித்து கலந்துரையாடக்கூடிய வாய்ப்புகள் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மறக்கமுடியாத நிகழ்வுகளாய் எனது கவிக்காதலன் கவிப்பேரரசு வைரமுத்து, ஆச்சி மனோரமா, இயக்குனர் ஷங்கர், பத்மஸ்ரீ S.P.B, பத்பூஷன் K.J.Jesuthas ஆகியோரை தனிப்பட்டமுறையில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தமையைக் கூறலாம்.
நிறையவே எழுதிவிட்டாலும் இன்னமும் நிறையவே இருக்கிறது. இப்பொழுதுதானே ஆரம்பம். தொடர்ந்து இணைந்திருங்கள் ஒரு ஒலிப்பரப்பாளன் குரலாய் உலகமெங்கும் வலம் வரும் இணையத்தை உங்கள் உறவுகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்கள் வசம் இருக்கும் ஆக்கபூர்வமான படைப்புகளை எமக்கு அனுப்பி வையுங்கள் அனைவரும் இணைந்து பயணிப்போம். இனிவரும் காலம் இளைஞர்கள் காலமாய் அமையட்டும்.
ஓய்ந்து போயிருந்த என் பேனாக்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து தொடர்ந்து எழுத ஆரம்பித்து வைத்த எனது வலைப்பின்னல் வடிவமைப்பாள நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். இதுவரை காலமும் இனிவரும் காலமும் ஆக்கப+ர்வமான கருத்துக்களை, விமர்சனங்களை, பாராட்டுக்களை தந்து ஊக்கப்படுத்திய உறவுகள் உங்கள் அனைவருக்கும் எனது இதய நன்றிகள்.
புலரும் புத்தாண்டு புனிதமாகட்டும்
அல்லலுறும் எம் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியுண்டாகட்டும்
என்றும் சிநேகமுடன்
உங்கள் சிநேகிதன்
கஜன் கணேசலிங்கம்
Jan 01, 2008 www.snehithan.com
Subscribe to:
Posts (Atom)